Monday, November 2, 2009

செங்கடல்

செங்கடல் (Red Sea) ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. செங்கடல் இந்தியப் பெருங்கடலுடன் தெற்கே பாப்-எல்-மாண்டெப் நீரிணையும் ஏடென் வளைகுடாவும் இணைக்கின்றன. வடக்கே சினாய் குடா, அக்காபா வளைகுடா, சூயெஸ் வளைகுடா ஆகியன இணைக்கின்றன.
செங்கடலின் மொத்தப் பரப்பு ஏறத்தாழ 174,000 சதுர மைல்களாகும். கிட்டத்தட்ட 1,900 கிமீ நீளமும், 300 கிமீ அகலமும் கொண்டது. இதன் அதிகூடிய ஆழம் 2,500 மீட்டர்கள் ஆகும்.

வடகடல்

வடகடல் ஐரோப்பியக் கண்டத்திட்டின் மீதமைந்த ஆர்க்டிக் மாக்கடலினுள் உள்ள ஒரு கடல். இக்கடல் 600 மைல் நீளமும் 350 மைல் அகலமும் கொண்டது. இதன் பரப்பு 222,000 சதுர மைல்கள். இதன் சராசரி ஆழம் 100 மீட்டர்கள். அதிகபட்சமாக 700 மீ ஆழம் வரை காணப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தின் ஆறுகளுள் பல இக்கடலில் வந்து சேர்கின்றன.

கரிபியக் கடல்

கரிபியக் கடல் மேற்கு அரைக்கோளத்தில் மெக்சிகோ குடாவிற்கு தென்கிழக்கில் அமைந்துள்ள அயனமண்டல ஒரு கடலாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இக்கடல் கரிபிய புவியோட்டின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருக்கிறது. இதன் எல்லைகளாக தெற்கில் தென் அமெரிக்காவும், மேற்கே மத்திய அமெரிக்காவும் , மெக்சிகோவும், வடக்கிலும் கிழக்கிலும் அண்டிலுசு: பாரிய அண்டிலிசு தீவுகளான கியூபா, இஸ்பனியோலா , யமேக்கா , போட்ட ரிக்கோ வடக்கிலும் சிறிய அண்டிலுசுத் தீவுகள் கிழக்கிலும் அமைந்துள்ளன. கரிபியக்கடலின் முழுமையும் அதில் அமைந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அனைத்தும், அருகே அமைந்துள்ள கடற்கரைகளும் கூட்டாக கரிபியம் என அழைக்கப்படுகிறது.
2,754,000 சதுர கிலோமீட்டர் (1,063,000 சதுர மைல்).
பரப்பளவைக் கொண்ட கரிபியக்கடல் உலகில் பாரிய உப்புக்கடல்களில் ஒன்றாகும். கடல் மட்டத்துக்குக் கீழ் 7,686 மீ. (25,220 அடி) ஆழமுடைய கரிபியக் கடலின் ஆழமான புள்ளி கியுபாவுக்கும் யமேக்காவுக்குமிடையே அமைந்துள்ள கேமன் ஆழியாகும். கரிபியக் கடற்கரை பல குடாக்களையும், விரிகுடாக்களையும் கொண்டுள்ளது.

Sunday, November 1, 2009

பறவைகள்

அன்னம்
அபூர்வமான இயல்புகள் பல இதன் மீது ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளன. பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற சக்தி இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று. இது ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன் காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னப் பட்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னப்பட்சி மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னப் பட்சியின் உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். அன்னப் பட்சி என்பது இந்தியப் பழங்கதைகளில் வருகின்ற ஒரு கற்பனைப் பறவையாகும்.

முக்குளிப்பான்

முக்குளிப்பான் (Tachybaptus ruficollis) என்பது குடிபெயராத/புலம்பெயராத சுமார் 23 செ.மீ அளவுடைய ஒரு இந்திய வாத்தாகும். இதை தண்ணிப்புள்ளு எனவும் அழைப்பர். மந்த-காக்கி நிறம் கொண்ட குண்டான நீர்ப்புள் இது. சிறிய, கூரான அலகும் வாலற்றதுமான இந்தப் பறவை ஏரிகளிலும் (வேடந்தாங்கல்) குளங்களிலும் இணையாகவோ கூட்டமாகவோ காணப்படும்.
இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் சமவெளியிலிருந்து 2500 மீ உயரம் வரை காணப்படும். நன்றாக நீந்தவல்லது; தேர்ந்த மூழ்கி. சிறு அலை கூட எழுப்பாமல் மிகவும் வேகமாக மூழ்கும் திறனுடையது.
பொதுவாக அதிக இயக்கம் இல்லாது இருந்தாலும் தேவைப்படும் போது அதிக தூரங்களுக்கு பறக்கவல்லது. நீர்ப்பூச்சிகள், அவற்றின் நுண்புழுக்கள், தலைப்பிரட்டைகள், தவளைகள மற்றும் கிரத்தேசியன்கள்.

மீன்கொத்தி

மீன்கொத்தி உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் ஒரு பறவையினமாகும். ஏறத்தாழ 90 வகையான மீன்கொத்தி இனங்கள் உலகில் உள்ளன. இவை பெரிய தலைகளும் நீண்ட கூரிய அலகுகளும் குட்டைக் கால்களும் சிறு வால்களும் கொண்டவையாகும். எடுப்பான நிறங்கள் கொண்ட இம் மீன்கொத்தி இனங்களின் வகைப்பாட்டில் மூன்று குடும்பங்கள் உள்ளனன. அவையாவன, ஆற்று மீன்கொத்திகள் எனப்படும் ஆல்சிடினிடீ (Alcedinidae), மர மீன்கொத்தி எனப்படும் ஆல்க்கியோனிடீ (Halcyonidae), நீர் மீன்கொத்தி எனப்படும் செரிலிடீ (Cerylidae).
நீர்நிலையருகில் வாழும் மீன்கொத்திகள் சுழியோடி சிறு மீன்களைப் பிடித்து உண்கின்றன. தவளைகள், பூச்சிகளையும் உண்கின்றன. இவற்றின் கண்கள் நீருள்ளும் வெளியேயும் பார்க்கக் கூடியதான முட்டைவடிவ வில்லையைக் கொண்டுள்ளன. மர மீன்கொத்திகள் ஊர்வனவற்றைப் பிடித்துண்கின்றன. எல்லா வகையான மீன்கொத்திகளும் தாம் பிடித்த இரையை மரத்தில் அடித்தோ கல்லில் வீழ்த்தியோ கொன்று உண்கின்றன.

பூநாரை

வளைந்த அலகும் இளஞ்சிவப்பு நிற உடலும் கொண்ட கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சேர்ந்த பறவை இது. உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கிப் பிழைக்கும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று.
குஜராத்தின் கச்சு (Rann of Kutch) பகுதியில் தான் இவை கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் கூடு சேற்று மண்ணைக் குவித்து ஏற்படுத்தப்படுகின்றது. இனச்சேர்க்கை முடிந்து, முட்டையிட்டபின் ஆண், பெண் பூநாரைகள் இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்று அடை காக்கும். பல்லாயிரம் பூநாரைகள் ஒன்றாக கூடி இருப்பது இவற்றின் தனித்தன்மை - இதுவே இவற்றுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது. நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் நீட்டியபடி பூநாரைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
கால்களால் சேற்றுநீரைக் கிளறியவுடன், வளைந்த அலகைக் கொண்டு நீரை அள்ளும் பூநாரை, அதன் அலகினுள் இருக்கும் வடிகட்டும் அமைப்பைக் கொண்டு தன் இரையை மட்டும் எடுத்துக்கொள்கிறது. பூநாரையின் உணவில் மிதவை உயிரிகள் (planktons), முட்டைப்புழுக்கள் (larvae), சிறு மீன்கள் ஆகியவை அடங்கும். பூநாரைகள் உண்ணும் கூனிறால -போன்ற ஒரு வகை கிரத்தேசிய உயிரினம் தான் இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கு காரணமாகும். பறவைகள் காப்பகத்தில் வைத்து பராமறிக்கப்படும் பூநாரைகள் இந்நிறமற்று காட்சியளிப்பது நாம் அறிந்ததே. மகிழ்வூட்டும் இப்பறவைகளின் கோடியக்கரை வரத்து வருடாவருடம் குறைந்து கொண்டிருப்பது நமக்கு ஒரு எச்சரிக்கை மணியே.