Saturday, October 31, 2009

வாத்து

வாத்து ஒரு பறவை ஆகும். பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை. குறிப்பாக ஆசிய மக்கள் வாத்துக்களை உண்கிறார்கள். இதில் பல வகை உண்டு. கனடா வாத்து அல்லது கனடா கூஸ் என்பது வட அமெரிக்காவில் வாழும் வாத்து வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இதன் முகமும் கழுத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் தொடக்கத்தில் வெள்ளை நிறமான வளைய வடிவம் உண்டு. இதன் உடல் வெள்ளையும் சாம்பலமும் கலந்த நிறம் கொண்டது. கனடா வாத்து 76-110 செமீ நீளம் வரை வளரும். ஆண் வாத்து 3.2-6.5 கிகி எடை உடையது. விரிந்திருக்கும் போது இதன் இறக்கை 127-180 செமீ வரை இருக்கும்.

கிளி


கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவை சிறப்பியல்பான வளைந்த அலகு கொண்டன. கிளிகள் zygodactyl, அதாவது ஒவ்வொரு காலிலும், முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்கள் அமையப் பெற்றவை.
பழங்களும் கொட்டைகளும் கிளிகளின் முக்கிய உணவு. கிளிகள் மாந்தரின் பேச்சைக் கேட்டு அதைப்போலவே ஒலி எழுப்ப வல்லவை. பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும்.கிளிகளிடம் மக்கள் அதிகம் பேச விரும்புகின்றனர். பேசும் கிளிகளோ சொன்னதைச் சொல்லி மகிழ்ச்சியை உண்டாக்கும். சிறிய பொம்மைக்காரை ஓட்டும். ஊஞ்சல் ஆடும். வித்தைகள் கற்றுக்கொடுத்தால் அதையும் செய்யும். பேசாத கிளிகளோ ‘ஆம்’ ‘இல்லை’ என்பதற்கு ஏற்பச் செயல்படும். இதனால், நடக்க முடியாத, பேச முடியாத நோயாளிகூட இவ்விரண்டையும் உள் எழுச்சியின் மூலம் ஊக்கம் பெற்றுச் செய்து காட்டிவிடுவார். கிளிகளுக்கு அறிவு, திறமை, முக்கியமான வேலைகளைச் செய்யும் ஆற்றல், மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் ஆற்றல் முதலியன உள்ளன. அதனால்தான் கிளிகளைத் தேர்வு செய்தார்கள். அடுத்து, ‘ஏ பேர்ட் இன் தி ஹேண்ட்’ என்று இந்தத் திட்டத்திற்கு பெயர் சூட்டினார்கள். பேசும்கிளி வளர்த்தால், இருவர் உரையாடும்போது அதைக்கேட்டு அப்படியே அது மிமிக்ரி செய்யும். மூன்று நோயாளிகளையும் ஒரு பேசும் கிளியையும் வைத்துப் பேசப் பயிற்சி அளித்தால் போதும். எஞ்சிய நேரங்களில் கிளியே கொஞ்சி கொஞ்சிப் பேசி நோயாளிகளைப் பேச வைத்துவிடுமாம்.வீட்டில் கிளி வளர்க்க ஆரம்பித்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகுந்த நலத்துடன் இருப்பார்கள். நடுத்தர வயதுக்காரர்கள், பெரிய பறவைக்கூண்டில் பல்வேறு வகையான கிளிகளை வளர்த்து வந்தால் குடும்பச் சூழ்நிலைகளில் உள்ள கடுமை, கோபம் முதலியன குறையுமாம். குருவி வகைகளும் இதே அளவு நன்மைகள் செய்கின்றன.

புறா

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 300 வகை இனங்கள் உள்ளன. புறாக்கள் உலகெங்கிலும் உள்ளன என்றாலும், இந்தியா, மலேசியா, இந்தோனீசியா முதலிய தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.
இது தானிய வகைகளை மட்டும் உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். பறவைகளிலேயே புறா மட்டுமே தண்ணீரைத தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது என்றும் சொல்லப்படுவதுண்டு. இது வீட்டிலும் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும் சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுபெரியவை.

பென்குயின்

பென்குயின்கள், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், Eocene சகாப்தத்தில் உருவாகின. பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்ளே வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப் பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகளிலிலோ வெப்பக் காலநிலைப் பகுதிகளிலோ கூடக் காணப்படுகின்றன.பென்குயின்கள் (order ஸ்பெனிசிபோர்மெஸ், குடும்பம் ஸ்பெனிசிடே) தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. பல பென்குயின்கள் உயிர் வாழ்வுக்கு க்ரில் , மீன், ஸ்ஃஉஇட்(squid) முதலிய கடல்வாழ் உயிரினங்களைச் சார்ந்துள்ளன. நீரின் கீழ் நீந்தி இவற்றைப் பிடித்து உண்கின்றன. இவற்றின் செவிப்புலன் மிகச் சிறப்பானது. கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும். காற்றில் இவைகளால் நீண்டதூரம் பார்க்க முடியாது. இவற்றின் மணக்கும் சக்தி பற்றி அதிக தகல்வல்கள் தெரிய வரவில்லை. நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன. ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இது "தொபோகானிங் (tobogganing)" என அழைக்கப்படுகின்றது.

மயில்

மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.

கோழி


கோழி மனிதனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஒரு பறவையாகும். இதில் பெண்ணினம் கோழி எனவும் ஆணினம் சேவல் எனவும் வழங்கப்படுகிறது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது . இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் தொழில்முறை கோழிப் பண்ணைகளுக்கு பெயர் பெற்ற ஊராகும்.

காகம்


காகம் என்பது பொதுவாக கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இது பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது மக்கள் வாழும் இடங்களில் அதிகமாக இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும் மற்ற வீண்பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இதன் காரணமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் ஒரு பங்கு வகிக்கிறது.
இவற்றை மிக இலகுவாக பயிற்றுவிக்க முடியும். காகங்களை பழக்கி இலகுவாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றை செல்லபறவைகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும்.காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய, ஆசிய இனங்கள் பல உள்ளன. கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியன ஆசியக் காக இனங்களாகும்.